Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய விருது பெற்ற வாலிபர் விபத்தில் பலி

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (12:35 IST)
இந்தியா முழுவதும் காரில் சுற்றுப்பயணம் செய்து தேசிய விருது பெற்ற  கேரளாவைச் சேர்ந்த குரியன் ஜேக்கப் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கோட்டயம் திருவல்லா நகரை சேர்ந்த ஜேக்கப்பின் மகன் குரியன் ஜேக்கப்(25), இவர் இந்தியா முழுவதும் காரில் சுற்றுப்பயணம் செய்து தேசிய விருது பெற்றவர். குரியன் ஜேக்கப் தனது நண்பர்களை பார்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த சுற்றுலா பேருந்து எதிர்பாராத விதமாக ஜேக்கப்பின் இரு சக்கர வாகனத்தின் மேல் மோதியது.
 
இதில் படுகாயமடைந்த ஜேக்கப்பை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி ஜேக்கப் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments