Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் திடீரென நிறுத்தப்பட்ட ‘புஷ்பா 2’ திரைப்படம்.. என்ன நடந்தது தியேட்டரில்?

Siva
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (17:29 IST)
மும்பையில் மர்ம நபர் ஒருவரின் செயல் காரணமாக ‘புஷ்பா 2’திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில், நேற்று ஹைதராபாத்தில் படம் பார்க்க வந்த ஒரு பெண் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மும்பையில் உள்ள பாந்த்ரா என்ற பகுதியில் உள்ள திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தியேட்டரில் ஸ்பிரே அடித்தார். இதனால் படம் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு இருமல், தும்மல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக படம் நிறுத்தப்பட்டது.

இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து தியேட்டரில் விசாரணை செய்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு எதுவும் செய்யவில்லை என்றாலும், இந்த சம்பவம் காரணமாக சில நிமிடங்கள் தியேட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments