Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னிடம் ஒரே ஒரு 500 ரூபாய் தான் இருந்தது.. காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி விளக்கம்..!

Siva
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (16:58 IST)
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங் உட்கார்ந்திருந்த இடத்தில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தன்னிடம் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டுமே இருந்தது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

"நாடாளுமன்றத்தில் நான் உட்காந்திருந்த இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து இருப்பதாக இப்போதுதான் கேள்விப்பட்டேன். நான் எப்போதும் மாநிலங்களவைக்கு சென்றாலும் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டும் தான் கொண்டு வருவேன்.

நேற்று பகல் 12:57 மணிக்கு மாநிலங்களவைக்குள் நுழைந்தேன்.  1 மணிக்கு எழுந்து விட்டேன்,. பிறகு 1:30 மணிக்கு நான் நாடாளுமன்ற உணவகத்தில் தான் அமர்ந்திருந்தேன். அதன் பிறகு நாடாளுமன்றத்தில் இருந்து வீடு திரும்பி விட்டேன்" என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக நேற்றைய நாடாளுமன்றம் கலைந்தவுடன், வழக்கமான சோதனைகள் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி என்பவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் கட்டு கட்டாக பணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், உடனே இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும் மாநிலங்களவை தலைவர் கூறியுள்ளார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments