Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னிடம் ஒரே ஒரு 500 ரூபாய் தான் இருந்தது.. காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி விளக்கம்..!

Siva
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (16:58 IST)
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங் உட்கார்ந்திருந்த இடத்தில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தன்னிடம் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டுமே இருந்தது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

"நாடாளுமன்றத்தில் நான் உட்காந்திருந்த இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து இருப்பதாக இப்போதுதான் கேள்விப்பட்டேன். நான் எப்போதும் மாநிலங்களவைக்கு சென்றாலும் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டும் தான் கொண்டு வருவேன்.

நேற்று பகல் 12:57 மணிக்கு மாநிலங்களவைக்குள் நுழைந்தேன்.  1 மணிக்கு எழுந்து விட்டேன்,. பிறகு 1:30 மணிக்கு நான் நாடாளுமன்ற உணவகத்தில் தான் அமர்ந்திருந்தேன். அதன் பிறகு நாடாளுமன்றத்தில் இருந்து வீடு திரும்பி விட்டேன்" என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக நேற்றைய நாடாளுமன்றம் கலைந்தவுடன், வழக்கமான சோதனைகள் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி என்பவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் கட்டு கட்டாக பணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், உடனே இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும் மாநிலங்களவை தலைவர் கூறியுள்ளார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments