Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 872 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம்!

ஒரே நாளில் 872 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம்!
, செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (19:46 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் இன்று சென்செக்ஸ் உச்சத்திற்கு சென்றது என்றே கூறலாம். இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 872.73 புள்ளிகள் உயர்ந்தது என்பதால் இன்றைய வர்த்தகத்தின் முடிவில் 53823.36  என்ற நிலையில் முடிந்தது
 
அதேபோல் நிஃப்டி இன்று ஒரே நாளில் 245.60 புள்ளிகள் உயர்ந்தது என்பது இன்றைய வர்த்தக முடிவில் 16130.75  புள்ளிகளில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது என்பதும் முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் முழுவதும் மீண்டு வருவதை அடுத்து பொருளாதாரமும் எழுச்சி பெற்று உள்ளதால் பங்குச் சந்தையும் உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூடு பிடிக்கின்றது பொள்ளாச்சி பாலியல் வழக்கு: விரைவில் தீர்ப்பு!