Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய உச்சம் பெற்று மும்பை பங்குச்சந்தை சாதனை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:19 IST)
புதிய உச்சம் பெற்று மும்பை பங்குச்சந்தை சாதனை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது கொரோனா வைரஸ் உச்ச கட்டத்தில் இருந்த நிலையில் பங்குச்சந்தை மிக மோசமாக இறங்கியதும், லட்சகணக்கான கோடிகள் பங்குச் சந்தையில் நஷ்டம் அடைந்தால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடந்த சில வாரங்களாக பொருளாதாரம் மீண்டும் உச்சத்திற்கு சென்று வருவதை அடுத்து பங்குச் சந்தையும் உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் அவர்கள் வெற்றி பெற்றதன் தாக்கமும் பங்குசந்தைகள் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பங்கு சந்தை உச்சத்தில் இருந்து வரும் நிலையில் மும்பை பங்குச் சந்தையும் கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றத்தில் உள்ளது இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 523  புள்ளிகள் உயர்ந்து 44161 புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சம் பெற்று சாதனை படைத்தது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 94 புள்ளிகள் உயர்ந்து 12827 புள்ளிகளை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மும்பை பங்கு சந்தை புதிய உச்சம் பெற்றுள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments