Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் நாளே 1300 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு: முடிவே இல்லையா?

sensex
, திங்கள், 13 ஜூன் 2022 (09:18 IST)
இந்திய பங்குச்சந்தையின் மும்பை சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக சரிந்து வருவதை பார்த்து வருகிறோம். இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தை திறக்கப்பட்ட உடன் சுமார் 1350 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர் 
 
சற்று முன் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1350 புள்ளிகள் சரிந்து 52 ஆயிரத்து 950 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 375 புள்ளிகள் சரிந்து 15,825 என்ற நிலையில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்கு சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் லட்ச கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானத்தில் அமர்ந்த பிறகு ரத்து அறிவிப்பு: ‘ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு கண்டனம்!