Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையை மிரட்டும் கனமழை: மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (10:56 IST)
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழை நீடிப்பதால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், சில நாட்களாகவே கனமழை பெய்துவருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மும்பையிலுள்ள தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழை பெய்துவருவதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

அடுத்த கட்டுரையில்
Show comments