Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகளுக்கு மயக்க மாத்திரை கொடுத்து விபச்சாரத்தில் தள்ளிய கொடுமை.. மாமியார் கைது..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (11:36 IST)
மருமகளுக்கு மயக்க மாத்திரை கொடுத்து விபச்சாரத்தில் தள்ளிய மாமியாரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி சந்து என்பவரை காதலித்த நிலையில், பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், தங்கள் மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், சிறுமியை மீட்ட காவல்துறை. அவரை திருமணம் செய்த சந்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சிறுமியை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்க காவல்துறையினர் முயன்ற போது, பெற்றோர்கள் தங்கள் மகளை ஏற்க முடியாது என்று அறிவித்து விட்டனர். இதையடுத்து, சிறுமியை சந்துவின் தாயார்  நீலிமா என்பவரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், மாமியார் நீலிமா தனது மருமகளுக்கு மயக்க மாத்திரைகள் கொடுத்து விபச்சாரத்தில் தழுவியதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், தங்கள் மகளை மீட்டு காவல் துறையில் புகார் அளித்த நிலையில், தற்போது மாமியார் நீலிமா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினரை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments