Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்! மலையேறும் பக்தர்களுக்கு எச்சரிக்கை!

Prasanth Karthick
வெள்ளி, 31 ஜனவரி 2025 (11:23 IST)

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால் மலையேறும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அவ்வப்போது புலி, சிறுத்தை நடமாட்டம் உள்ளிட்டவற்றால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. அவ்வபோது வனத்துறையினர் மிருகங்களை கூண்டு வைத்து பிடித்து காட்டுப் பகுதிகளில் விட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் திருப்பதி கோவிலில் இருந்து 5கி.மீ தொலைவில் உள்ள சீலா தோரணம் மலைப்பகுதியில் சிறுத்தை ஒன்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்ததை அப்பகுதி வழியாக சென்ற பக்தர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் தகவலறிந்து வந்து பார்த்தபோது சிறுத்தை அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றிருந்தது.

 

எனினும் சிறுத்தை பக்தர்களின் மலைப்பாதையில் குறுக்கிடலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் திருப்பதி மலைப்பாதையில் பயணிக்கும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தேவஸ்தான அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments