Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓரேவீட்டில், அம்மா, மகள், பாட்டி மூவரும் கர்ப்பம்? வைரலாகும் புகைப்படம்

kerala
, வியாழன், 23 மார்ச் 2023 (21:31 IST)
கேரளாவில் அம்மா, பாட்டி, மாமியார் ஆகிய 3 பேரும் கர்ப்பிணி பெண்ணுடன் சேர்த்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இன்றைய நவீன இணையதள யுகத்தில்,எல்லோரும் எல்லா நிகழ்ச்சிகளிலும் புகைப்படம் எடுடிக்க விரும்புகிறனர். அப்படி எடுக்கும் புகைப்படங்கள் எல்லாம்  வாழ்க்கையின் முக்கிய தருணங்களை, சந்தோஷமான நிகழ்வுகளை மீண்டும்  நினைவுகூர உதவுகின்றன.

இப்போதெல்லாம், பிறந்தநாள்,கலியாணம், குழந்தை பிறப்பு, காதுகுத்து,  பேர் வைத்தல் ஆகிய  நிகழ்ச்சிகளுக்கு போட்டோஷூட் நடத்தப்படுவது வாடிக்கையாடி விட்டது.

இந்த நிலையில், தற்போது, மகப்பேறு போட்டோஷூட் பிரபலமாகி வருகிறது. அதன்படி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்ப்பகால போட்டோஷூடி நடத்தியுள்ளார்.

இதில், அவரது மாமியார், அம்மா, பாட்டி என எல்லோரும் தலையணை வைத்துக்கொண்டு கர்ப்பமாக இருப்பதுபோல் மேக்கப் செய்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இது வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக குத்துச்சண்டை போட்டி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீத்து காங்கஸ்