Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மேலும் 3607 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மேலும் 3607 பேருக்கு கொரோனா
, வியாழன், 11 ஜூன் 2020 (22:54 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளத நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,86,579 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 8,102 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,41,029 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மேலும் 3607 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 152 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,648 ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலையில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் !