Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி அலை என்பது சோடா பாட்டில் வாயு போன்றது: சித்து

மோடி அலை என்பது சோடா பாட்டில் வாயு போன்றது: சித்து
, புதன், 12 டிசம்பர் 2018 (07:35 IST)
ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தலில் குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி அக்கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது. மோடி அலை ஓய்ந்து ராகுல் அலை வீசுவதாகவே பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து, இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறுகையில், 'மோடி அலை ஓய்ந்துவிட்டது என்றும், மோடி அலை என்பது சோடா பாட்டிலில் உள்ள வாயு போன்றது என்றும், பாட்டிலை திறந்த 2 அல்லது 3 நிமிடங்களில் அது ஆவியாகிவிடுவது போல் மோடி அலை தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

webdunia
சித்துவின் இந்த விமர்சனத்திற்கு பாஜகவினர் கண்டனமும் காங்கிரஸார் வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிசர்வ் வங்கிக்குப் புதிய ஆளுநர் – மத்திய அரசு அறிவிப்பு