Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிவிட்டரில் பெயரை மாற்றிய மோடி – டிரண்ட்டாகும் சவுகிதார் !

டிவிட்டரில் பெயரை மாற்றிய மோடி – டிரண்ட்டாகும் சவுகிதார் !
, ஞாயிறு, 17 மார்ச் 2019 (15:09 IST)
இந்தியாவின் பிரதமர் மோடி டிவிட்டரில் தனது பெயரை சவுகிதார் நரேந்திர மோடி என மாற்றம் செய்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நரேந்திர மோடி, நாட்டில் யாரும் ஊழல் செய்ய விடமாட்டேன், நானும் ஊழல் செய்யமாட்டேன். தேசத்தின் காவலாளியாக இருப்பேன் என்று பேசியிருந்தார்.  ஆனால் இப்பொழுது ரஃபேல் ஊழலில் மத்திய அரசுக்கும் தொடர்பு இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர் குற்றம் சாட்டி வருகிறார். மேலும் தன்னைக் காவலாளி எனக் கூறிவரும் பிரதமர் ஒரு திருடன் எனக் கூறிவருகிறார்.

இதனால் பிரதமர் மோடி தனது பெயரை டிவிட்டடில் சவுகிதார் (காவலாளி) நரேந்தர மோடி என மாற்றியுள்ளார். மேலும் ‘உங்களுடைய காவலாளிக்கு ஆதரவாகவும், தேசத்துக்குச் சேவை செய்யும் துணையாகவும் இருங்கள். நான் தனியாக இல்லை. ஊழலுக்கும், தேசத்தில் சமூகக் கொடுமைக்கும் எதிராகப் போராடும் ஒவ்வொருவரும் காவலாளிதான். ஆதலால், காவலாளியாகிய நான் தனியாக இல்லை. தேசத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளிதான். இன்று ஒவ்வொரு இந்தியரும் நானும்கூட காவலாளிதான் என்று கூறுகிறார்கள்’ என மக்களையும் துணைக்கு சேர்த்துக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியைத் தொடர்ந்து பியுஷ் கோயல் மற்றும் அமித் ஷா போன்றவர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் சவுகிதார் என்ற பெயரை சேர்க்க ஆரம்பித்துள்ளனர்,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களுக்கும் வேண்டாம் .. எங்களுக்கு வேண்டாம் - முடிவுக்கு வந்த சின்னம் பிரச்சனை !