Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரயான் 2 திட்டத்தால் நாடு ஒன்றுபட்டுள்ளது..மோடி புகழாரம்

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (08:56 IST)
இஸ்ரோவின் சந்திரயான் 2 திட்டத்தால் இந்தியாவே ஒன்றுபட்டுள்ளது என மோடி என மோடி புகழ்ந்துள்ளார்

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவிற்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்த போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ தலைவர் சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், பிரதமர் மோடி, மட்டுமல்லாமல் இந்தியாவே சோகத்தில் மூழ்கியது. ஆனாலும் இஸ்ரோ முயற்சியை கைவிடவில்லை. இதனையடுத்து நேற்று விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க வேண்டிய இடத்திற்கு 500 மீ தொலைவில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அடுத்த மாதம் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அந்த மாநிலத்தின் ரோட்டக் நகரில் பிரதமர் மோடி பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், ”பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிய நிலையில், வளர்ச்சி, நம்பிக்கை, மற்றும் மிகப்பெரிய மாற்றங்களை தீர்க்கமாகவும், அர்ப்பணிப்போடும் செய்து வருகிறது.” என கூறினார்.

மேலும் அவர், ”இஸ்ரோ திட்டம் நாட்டை தட்டி எழுப்பியுள்ளது, சந்திரயான் 2 திட்டத்தால் இந்தியாவே ஒன்றுபட்டுள்ளது.” என புகழ்ந்து பேசினார். நாட்டில் நிலவிவரும் பொருளாதார சரிவு, மதவாத பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை குறித்து நடவடிக்கை எடுக்காமல் ராக்கெட் விடுவதில் என்ன நன்மை ஏற்படப்போகிறது என சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே பலர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். ஆனாலும் இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியில் இது ஒரு மைல் கல் என பலரும் புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிக்கன் சமைக்க வேண்டாம்.. மனைவி பேச்சை கேட்காத கணவர்.. பரிதாபமாக பலியான உயிர்..!

ஒரே நாளில் இனி ₹10 லட்சம் யூபிஐ-யில் பரிவர்த்தனை செய்யலாம்.. தனி நபருக்கு எவ்வளவு?

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. 53 நாட்களுக்கு பின் வெளியே வந்த ஜகதீப் தன்கர்

வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்! தமிழகத்திற்கு கனமழையா?

நேபாளம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments