Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு திட்டம் என்றால் என்னவென்றே தெரியாது! அமெரிக்க ஆய்வாளர் கருத்து!

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (11:32 IST)
இந்தியாவில் எந்தவொரு திட்டமும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவைப் பரவலைத் தடுக்க, கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு கம்மியாக இருந்தாலும், நாம் அதிகமாக இன்னும் சோதனைகள் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் மே 3 ஆம் தேதியோடு முடியவிருந்த ஊரடங்கு மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் எந்தவொரு திட்டமும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதாரத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளாவது ‘நோய்த்தொற்றை பரிசோதிக்கும் மற்றும் சிகிச்சை அளிக்கும் திறன் குறைவாக உள்ளது. அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை சில அத்தியாவசிய சேவைகளை பாதிக்கிறது. பிரதமர் மோடிக்கு திட்டம் என்றால் என்னவென்று கூட தெரியாது என்று நான் கருதுகிறேன். மோடியின் நடவடிக்கைகளால் ஏழைகள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments