Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கஜானா காலியா... நிறப்பி வைக்க டகால்டி வேலை பார்க்கும் அரசு?

Advertiesment
பள்ளிக் கல்வித் துறை
, திங்கள், 9 டிசம்பர் 2019 (17:02 IST)
மத்திய அரசு பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 2 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கடந்த பல மாதங்களாக வரும் வரி வசூல் எதிர்ப்பார்த்ததைவிட குறைவாக உள்ளதாம்.  இதனால் வரி வசூலை அதிகரிக்க ஜிஎஸ் அடிப்படை வரி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசி திட்டுமிட்டு வருவதாக தகவல் வெளியாகியது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது  இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளுக்காக ரூ.56,536 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.3,000 கோடியைத் திரும்பப்பெற அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் இத்தகவலை மறுத்திருந்தாலும் இந்த நடவடிக்கைகான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்த ராஜினாமா... காலியாகும் காங்கிரஸ் கூடாரம்!