முப்படை தளபதிகளுடன் பிரதமர் திடீர் ஆலோசனை: அடுத்த தாக்குதலா?

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (19:38 IST)
முப்படை தளபதிகளுடன் இன்று காலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து முக்கிய ஆலோசனை செய்த நிலையில் பிரதமர் மோடி இன்று இரண்டு முறை முப்படை தளபதிகளுடன் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எனவே பாகிஸ்தான் மீது அடுத்த தாக்குதல் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்த நிலையில் பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இந்திய விமானப்படை பாகிஸ்தான் ராணுவத்தையோ மக்களையோ தாக்கவில்லை. தீவிரவாதிகளின் முகாம்களை மட்டும் அழித்துவிட்டு திரும்பியது. ஆனால் பாகிஸ்தானோ, இந்திய ராணுவத்தை தாக்க முயற்சிப்பதால் மீண்டும் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மாற்றி மாற்றி முப்படை தளபதிகளை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்குள் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே இப்போதைய நிலை என டெல்லி வட்டாரங்கல் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

இன்று நவம்பர் 19, சர்வதேச ஆண்கள் தினம்: கொண்டாட்டம் மற்றும் கவனம்!

எங்கள் போன்ற சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று - பிரியா ஆனந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments