சபரிமலை விவகாரம் – கேரளாவில் மோடி கொந்தளிப்பு

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (09:15 IST)
சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கான தடைநீக்கத்திற்குப் பிறகான போராட்டங்களைக் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சரியாகக் கையாளவில்லை என மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

சபரிமலை கோயிலுக்கு பல வருடங்களாக பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் உச்சநீதி மன்றம் பெண்களுக்கு அனுமதி அளித்து கோயிலுக்குள் செல்லலாம் என அறிவித்ததை அடுத்து இந்து அமைப்புகளும் ஐய்யப்ப பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தடைக்குப் பிறகு பெண்கள் கோயிலுக்குள் செல்ல முற்பட்ட போது இந்து அமைப்புகள் பல வகைகளில் அவர்களை செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் சபரிமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது. இந்து அமைப்புகளுக்கு பாஜக வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த சபரிமலை விவகாரத்திற்குப் பிறகு முதன் முறையாக கேரளவிற்கு நேற்று சென்ற பிரதமர் மோடி இது குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் ‘இடதுசாரி அரசு ஆன்மிகத்தையும், மதத்தையும் ஒருகாலத்திலும் மதித்ததில்லை. ஆனால் சபரிமலை விவகாரத்தில் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் நடவடிக்கைகள் வரலாற்றிலேயே எந்தவோர் அரசும் செய்யாத்தாகும்.’ எனக் குற்றம் சாட்டினார்.

மேலும் காங்கிரஸ் குறித்து ‘சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் பல நிலைப்பாடுகளை எடுத்துள்ளது. அது, தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments