Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடியின் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது இடஒதுக்கீடு சட்டம் !

Advertiesment
10 % இட ஒதுக்கீடு
, திங்கள், 14 ஜனவரி 2019 (08:19 IST)
பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. மேலும் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவரும் கையெழுத்து இட்டுள்ளார்.

இந்தியாவில் சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. மத்திய அரசுத் துறைகளில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாதி ரீதியாக இல்லாமல் பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடித் தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதற்குக் காங்கிரஸ், கம்யுனிஸ்ட் கட்சி போன்ற தேசியக் கட்சிகளிடம் ஆதரவுக் கிடைத்துள்ளது. ஆனால் மாநிலக் கட்சிகள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

திமுக மற்றும் அதிமுக எம்.பி.கள் இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். ஆனால் இந்த சட்ட மசோதா மாநிலங்களவையிலும் மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சட்டத்தை முதன் முதலில் அமலாக்க உள்ளது குஜராத் மாநிலம். மோடியின் மாநிலமான குஜராத்தில் இந்த சட்டம் இன்று முதல் அமல்படுத்த உள்ளது. இதை அம்மாநில முதல்வர் விஜய் ருபானி அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாட்டுப் பொங்கலன்று இறைச்சி விற்பனைக்குத் தடை!