Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மதபோதகர் ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்..!

Advertiesment
ஆசாராம் பாபு

Siva

, வெள்ளி, 7 நவம்பர் 2025 (08:24 IST)
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மதபோதகர் ஆசாராம் பாபுவுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் 6 மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 
ராஜஸ்தானில் ஒரு சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஆசாராம் பாபு, குஜராத்தில் பெண் சீடர் ஒருவரை வன்கொடுமை செய்த வழக்கிலும் ஆயுள் தண்டனை பெற்றவர்.
 
இந்நிலையில் அவருக்கு இதய நோய், உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற உடல்நல குறைபாடுகள்  காரணமாக சிறை மருத்துவமனையில் போதிய சிகிச்சை கிடைக்காததால் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இலேஷ் ஜே. வோரா மற்றும் ஆர்.டி. வச்சானி அடங்கிய அமர்வு, அவருக்கு 6 மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜாமீன் காலத்தில் ஆசாராம் பாபு மத பிரசங்கங்கள் மற்றும் கூட்டங்களை நடத்தக் கூடாது என்றும், தொடர்ந்து காவல்துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
 
முன்னதாக, ராஜஸ்தான் உயர் நீதிமன்றமும் அவருக்கு மருத்துவ அடிப்படையில் 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் ‘முட்டாள்’ என திட்டிய மேற்பார்வையாளர்.. அழகி எடுத்த அதிரடி முடிவு..!