Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படேல் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் வல்லரசாகிருப்போம்.. மத்திய அமைச்சர் கருத்து

Arun Prasath
சனி, 2 நவம்பர் 2019 (14:33 IST)
வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால் இந்தியா வல்லரசாக ஆகிருக்கும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 144 ஆவது பிறந்தநாளை ஒட்டி, ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் “ஒற்றுமை தின ஓட்டம்” நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார்.

அப்போது நிரூபர்களுக்கு பேட்டியளித்த அவர், ”படேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசாக இந்தியா ஆகிருக்கும். பிரதமர் மோடி காந்த 2014 ஆம் ஆண்டில் படேல் பிறந்ததினத்தை ஒற்றுமை தினமாக அறிவித்தார். அன்றிலிருந்து ஆண்டுதோரும் படேலின் பிறந்தநாள் ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது” என கூறியுள்ளார்.

மேலும் “படேல் 560 மாநிலங்களை இந்தியாவாக இணைத்தவர்” என கூறி புகழ்ந்தார். முன்னதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சக்திவாய்ந்த இந்தியாவிற்கான படேலின் பங்களிப்பை குறித்து பேசியுள்ள நிலையில், தற்போது தர்மேந்திர பிரதான் சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால் இந்தியா வல்லரசாகிருக்கும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments