Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீசையை முறுக்குனா பயந்துடுவோமா? – பாலகிருஷ்ணாவுக்கு ரோஜா பதிலடி!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (10:48 IST)
நேற்று ஆந்திர சட்டமன்றத்தில் நடிகரும், எம்.எல்.ஏவுமான பாலகிருஷ்ணா நடந்து கொண்ட விதம் குறித்து நடிகையும், அமைச்சருமான ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.



ஆந்திராவில் நேற்று சட்டமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டு சட்டமன்றத்தில் அமளியை ஏற்படுத்தினர். அப்போது தெலுங்கு தேசம் எம்.எல்.ஏவும், பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா சட்டமன்றத்தில் தொடையை தட்டி மீசையை முறுக்கி ஆக்ரோஷமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சரும், நடிகையுமான ரோஜா “தெலுங்கு தேசம் கட்சியில் 23 எம்.எல்.ஏக்கள் மட்டுமே. ஆனால் நாங்கள் 151 பேர். எங்களை மதிக்கவில்லை என்றால் உங்கள் நிலை என்னவாகும் என யோசியுங்கள்.

நடிகர் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கினால் நாங்கள் பயப்பட மாட்டோம். 2 முறை எம்.எல்.ஏவான பாலகிருஷ்ணா இதுவரை தொகுதி மக்களுக்காக எதையும் பேசியதில்லை. பெண்களை இழிவாக பேசும் வழக்கம் கொண்டவர் அவர்” என விமர்சித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments