Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல், மே, ஜூன் 3 மாதங்கள் வெயில் கொளுத்தும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (09:42 IST)
ஏப்ரல் மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் வெயில் கொளுத்தும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
ஏப்ரல் மாதம் நேற்று தொடங்கிய நிலையில் தற்போது நாடு முழுவதும் கடுமையான வெயில் அடித்து வருகிறது என்பதும் வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை கடும் கோடை வெயில் இருக்கும் என்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களிலும் கடும் வெப்ப அலை வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு வெப்பம் உக்கரமாக இருக்கும் என்பதால் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments