Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் அரசுக்கு எதிராக 300 இடங்களில் போராட்டம்: ராகுல் காந்திக்கும் அழைப்பு

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (09:31 IST)
குஜராத் அரசுக்கு எதிராக 300 இடங்களில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சிக்கு திட்டமிட்டுள்ள நிலையில் இந்தப் போராட்டத்திற்கு ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
குஜராத் மாநிலத்தில் பாஜக அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மட்டும் இன்றி அனைத்து மாநிலங்களிலும் ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 12-ம் தேதி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்றும் இரண்டாம் வட்டமாக 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த போராட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதீஸ் தெரிவித்துள்ளார். இந்த போராட்டங்களுக்காக போலீஸ் நிலையங்களில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் அனுமதி கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஒரு மாநிலத்தில் அமைதிக்காக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments