Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேனகா காந்தி, வருண்காந்தி திடீர் நீக்கம்: பாஜக அதிரடி!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (17:08 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் சமீபத்தில் விவசாயிகள் பேரணி மீது மத்திய அமைச்சர் மகன் ஒருவரின் கார் மோதியதால் 4 விவசாயிகள் பரிதாபமாக பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரண தொகை வழங்க வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு மேனகா காந்தி கடிதம் எழுதி இருந்தார்
 
அதுமட்டுமின்றி லக்கிம்பூர் சம்பவத்தை கண்டித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வருண்காந்தி பதிவு செய்திருந்தார் என்பதும், அது சம்பந்தமான வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் பாஜக நிர்வாக குழு உறுப்பினர்கள் 80 பேர் பட்டியல் சற்று முன் வெளியாகிய நிலையில் அதில் ஏற்கனவே நிர்வாக குழு உறுப்பினராக இருந்த மேனகா காந்தி மற்றும் வருண் காந்தி ஆகிய இருவரும் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments