Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெஹுல் கோச்சி இந்தியர் அல்ல… அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கூடாது… வழக்கறிஞர் வாதம்!

மெஹுல் கோச்சி இந்தியர் அல்ல… அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கூடாது… வழக்கறிஞர் வாதம்!
, வெள்ளி, 28 மே 2021 (08:42 IST)
கைது செய்யப்பட்டுள்ள மெஹுல் கோச்சியை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கூடாது என அவரின்  வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடியவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீரவ் மோடி. கடந்த 2018 ஆம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்ற நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று இந்திய அரசு கோரிக்கை விடுத்து வந்தது. இதுகுறித்த வழக்கும் லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தான் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு வெற்றியாக அவரை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீரவ் மோடி மேல் முறையீடு செய்ய முயற்சி செய்து வருகிறார்.

இதே போல நீரவ் மோடியின் மாமாவான மெகுல் சோக்ஸியும் வங்கி மோசடியில் ஈடுபட்டு ஆண்டிகுவா நாட்டுக்கு தப்பிச் சென்றார். அங்கு அவருக்கு குடியுரிமை இருந்ததால் அதை ரத்து செய்து இந்தியா அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே அவர் ஆண்டிகுவாவில் இருந்து தப்பித்து டொமினிகா என்ற சிறு தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து இண்டர்போல் உதவியுடன் சோக்ஸி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்னும் 48 மணிநேரத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது அவரின் வழக்கறிஞர் ‘மெஹுல் கோச்சி இப்போது இந்திய குடிமகன் இல்லை. அதனால் ஏற்கனவே இருக்கும் நாடு கடத்தும் விதிகள் பொருந்தாது. அதனால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கூடாது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபாடு காட்டாமல் வேலை: தமிழக அரசுக்கு எக்ஸ் மினிஸ்டர் அப்லாஸ்!