Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனிலவு கொலையில் கள்ளக்காதல் மட்டும் காரணம் அல்ல.. போலீசார் அதிர்ச்சி தகவல்..!

Mahendran
புதன், 18 ஜூன் 2025 (13:42 IST)
மேகாலயா மாநிலத்திற்கு தேனிலவு சென்ற ராஜா ரகுவன்சி என்ற இளைஞரை அவரது மனைவி சோனம் மற்றும் அவரது காதலர், கூலிப்படையை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது "தேனிலவு கொலை" என பரவலாக அறியப்பட்ட நிலையில், இந்தக் கொலையில் கள்ளக்காதல் மட்டுமே காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருந்தது.
 
ஆனால், தற்போது இந்த கொலைக்கு கள்ளக்காதல் மட்டுமே காரணமாக இருக்காது என்றும், வேறொரு முக்கிய காரணம் இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த வழக்கை விசாரித்து வரும் மேகாலயா காவல்துறை, "ராஜா ரகுவன்சியின் கொலையில் காதல் மட்டுமே இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
 
திருமணம் நடந்த ஒரே வாரத்தில் கணவரை கொலை செய்யும் அளவுக்கு சோனமுக்கு வன்மம் ஏன் அதிகரித்தது என்பதை கண்டறிய வேண்டும் என்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர். 
 
இந்தக் கொலை மேலோட்டமாகப் பார்த்தால் முக்கோணக் காதல் காரணமாக இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக சோனமுக்கு தனிப்பட்ட முறையில் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது" என்று போலீசார் கூறியிருப்பது, வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments