Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு! – பாஜக கண்டனம்!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (10:57 IST)
மேகாலயாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி கூட்டத்தில் பேச இருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் கட்சி, காங்கிரஸ், பாஜக ஆகிய பெரும் கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்தியாவின் பெருவாரி மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள பாஜக, மேகாலயாவிலும் ஆட்சியை பிடிப்பதற்காக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளில் பாஜக வெளியிட்டுள்ளது.

ALSO READ: சென்செக்ஸ் , நிப்டி மீண்டும் ஏற்றம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி மேகாலயாவின் துரா பகுதியில் பிப்ரவரி 24ம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்கான முறையான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ள பி.எ.சங்மா அரங்கில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு அனுமதிக்க முடியாது என மேகாலயா அரசு தெரிவித்துள்ளது.

இது திட்டமிட்ட செயல் என பாஜகவினர் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 24ம் தேதி பிரதமர் மோடி பேசுவதை தடுக்க முடியாது என்றும், மாற்று இடத்தில் பிரச்சார கூட்டம் நடைபெறும் என்றும் பாஜக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments