Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மையோனஸ் உணவுப்பொருளுக்கு மாநிலம் முழுவதும் தடை! - உணவு பிரியர்கள் அதிர்ச்சி!

Prasanth Karthick
வியாழன், 31 அக்டோபர் 2024 (07:22 IST)

கடந்த சில காலமாக மையோனஸ் உணவுப் பொருட்களால் உடல்நல பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டதால், மயோனஸ் உணவுப்பொருளுக்கு தடை விதித்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 

தற்போதைய ஃபாஸ்ட் புட் காலத்தில் இளைஞர்கள் பல்வேறு துரித கதி உணவுகளை விரும்பி சாப்பிட்டு வரும் நிலையில் பல உணவுகள் உடலுக்கு அபாயத்தை விளைவிப்பவையாக மாறி வருகின்றன. சமீபத்தில் கேரள, தமிழக பகுதிகளில் சவர்மா உணவால் பலருக்கு உடல்நல பிரச்சினைகள், உயிரிழப்புகள் ஏற்பட்டன.

 

இந்த சர்ச்சைக்குரிய உணவு வகைகளில் தற்போது மயோனஸும் இணைந்துள்ளது. முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனஸ் பொருளானது பர்கர், பீட்சா, சிக்கன் உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. சமீபமாக தெலுங்கானாவில் உணவு பொருட்களால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பு குறித்த சோதனையில் பெரும்பாலும் மயோனஸால் அதிக உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
 

ALSO READ: முதல் ஆளாய் தீபாவளி வாழ்த்து சொன்ன விஜய்! வழக்கம்போல வாழ்த்து சொல்லாத மு.க.ஸ்டாலின்!
 

இதனால் முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதித்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் முட்டை பயன்படுத்தாமல் தயாரிக்கப்படும் சைவ மயோனஸ்க்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. மயோனஸ்க்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை உணவு பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments