Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானைக்கு விழுந்த வாக்குகள் தாமரைக்கு போய்விட்டது: மாயாவதி பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (19:19 IST)
வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக யானை சின்னத்தில் விழுந்த வாக்குகள் எல்லாம் தாமரை சின்னத்திற்கு போய்விட்டதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பகீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
 
நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு நடந்தது
 
இந்த நிலையில்  வாக்குப்பதிவின் போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறானதால், யானை சின்னத்தில் பதிவான வாக்குகள், பாஜகவின் தாமரை சின்னத்திற்கு போய்விட்டதாக மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
மேலும் அடுத்து வரும் 6 கட்ட தேர்தல்களில் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்தை அவர் எச்சரித்துள்ளார். அதேபோல் வாக்கு பதிவாகும் மையங்களை தனது கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments