Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மானம் போச்சு : ’பாகிஸ்தான் பாடலை ’உல்டா ’ செய்த பாஜக எம்.எல்.ஏ

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (16:50 IST)
அனைத்துக் கட்சிகளும் தீவிரமான பிரசாரம் செய்து வருகின்றனர். எப்படியும் மறுபடியும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டுமென பாஜக கடுமையாக உழைத்து வருகிறது.  பல்வேறு கட்சிகள் பலவித தேர்தல் பிரசார யுக்தியில் இறங்கியுள்ளன. 
இந்நிலையில் தெங்கானாவில் உள்ள கோசமஹால் தொகுதி எம்.எல்.ஏ  தாக்கூர் ராஜா சிங் லோத் என்பவர் தான் ராம நவமி அன்று நமது இந்திய ராணுவத்திற்கு ஒரு பாடல் வெளியிடப்போவதாக தெரிவித்தார்.
 
இந்நிலையில் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் தான் வெளியிடுவதாகக் கூறியிருந்த பாடலை அவர் வெளியிட்டார்.
பாடல் புதிதாக இருக்கும் என்று அனைவரும் கேட்ட யாவருக்கும் ஒரே அதிர்ச்சி காரணம் இதே பாடலை கடந்த பாகிஸ்தான் நாட்டு ராணுவம் வெளியிட்டிருந்தது. இப்பாடலை சாஹிர் அலி பாஜ்ஹா என்பவர் எழுதியுள்ளதாகவும் தெரிகிறது.
 
இது இப்படியிருக்க இந்தப் பாடலைக் கேட்ட பாகிஸ்தான் நாட்டு ராணுவமந்திரி இதுபற்றி கருத்து தெரிவித்ததுடன் ‘ இது காப்பியடிக்கபட்டது ’என்று கூறியுள்ளார்.
 
இதனால் கடுப்பான நெட்டிஷன்ஸ் பாஜக எம்.எல்.ஏவை வசைபாடி விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

ஜெயலலிதா தீவிர இந்துத்துவா தலைவர் என்பதை அதிமுக உடன் விவாதிக்க தயார்: அண்ணாமலை

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு.. உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்...!

பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியதற்கு அதானி தான் காரணம்: ராகுல் காந்தி

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments