'மணிப்பூர் கலவரத்துக்கு காரணமே ப.சிதம்பரம் தான்..' முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல்..!

Siva
புதன், 20 நவம்பர் 2024 (17:23 IST)
மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் அம்மாநில முதலமைச்சர் பைரோன் சிங் திறமையின்மை தான் என்றும், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்த நிலையில் மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் ப. சிதம்பரத்தின் முந்தைய செயல்பாடுகள் தான் என்று மணிப்பூர் முதலமைச்சர் பைரோன் சிங் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது உள்துறை அமைச்சர் ஆக இருந்த ப. சிதம்பரம், மணிப்பூரில்  இபோபிசிங் முதல்வராக இருந்தார். அப்போது ப. சிதம்பரம் மியான்மர் நாட்டை சேர்ந்த தங்கலியன் பாவ் கைட் என்பவரை அழைத்து வந்தார். அந்த நபர் மியான்மர் நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராவார்.

மணிப்பூரில் பதட்டமான சூழல் நிலவுவதற்கு அடிப்படை காரணமே சட்டவிரோதமாக இது மாதிரியான குடியேற்றங்கள் தான். இதற்கு காரணமாக இருந்தது அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தான். அவர் தடை செய்யப்பட்ட இயக்க தலைவரை சந்தித்த புகைப்பட ஆதாரமும் இருக்கிறது என்று கூறி, அந்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மணிப்பூர் முதல்வரின் இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தியவர் எந்த நாட்டு தீவிரவாதி? FBI கண்டுபிடித்த உண்மை..!

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அரசியல் பரபர...

இந்திய பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments