பெங்களூரை சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர், தனது வாழ்நாள் சேமிப்பான ரூ. 66.6 லட்சத்தை, டேட்டிங் செயலி மூலம் சந்தித்த ஒரு பெண்ணால் நிகழ்த்தப்பட்ட ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சிக்கி இழந்துள்ளார்.
முதியவர் ஒரு பிரபலமான டேட்டிங் தளத்தில் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டார். இருவரும் விரைவாக வாட்ஸ்அப் மூலம் பேச தொடங்கினர். அங்கே அந்த பெண் நம்பிக்கை ஏற்படுத்தி, "லாபகரமான" ஒரு முதலீட்டு தளத்தை முயற்சி செய்யும்படி அவரை சம்மதிக்க வைத்தார். ஒரு வாரத்திற்குள், அதிக லாபம் தரும் ஆன்லைன் முதலீடுகள் பற்றிய எண்ணத்தை அவர் மனதில் விதைத்தார்.
விரைவில், அவர் ஒரு டெலிகிராம் குழுவில் சேர்க்கப்பட்டார். அதில் பல போலி பயனர்கள் வெற்றிகரமான முதலீட்டாளர்கள் போல நடித்தனர். ஆரம்பத்தில் கிடைத்த சிறிய லாபங்களால் உற்சாகமடைந்த அந்த முதியவர், முதலில் ரூ. 20,000 முதலீடு செய்தார். அவருக்கு லாபம் கிடைத்ததால் அவரது நம்பிக்கை வளர்ந்தவுடன், முதலீடுகளின் அளவும் அதிகரித்தன. அந்த முதியவர் தனது குடியிருப்பையும் விற்று, பல கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்து, கடைசியாக இருந்த ஒவ்வொரு ரூபாயையும் மோசடி கும்பலுக்கு கொடுத்ததாக தெரிகிறது.
ஒவ்வொரு முறையும் "இன்னும் கொஞ்சம் முதலீடு செய்யுங்கள்" என்று அந்த பெண் வற்புறுத்தியுள்ளார். அதன்பின் ஒரு கட்டத்தில் அனைத்து தொடர்புகளும் நின்றுபோய், டெலிகிராம் குழு மறைந்த பிறகே, உண்மை அவருக்குப் புரிந்தது.
இதுபோன்ற ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்று அந்த பெங்களூரு காவல்துறை அதிகாரி கூறினார். பாதிக்கப்பட்டவர் தனது வாழ்நாள் சேமிப்பை மட்டுமல்லாமல், தனது வீட்டையும் இழந்து தற்போது பரிதாபமாக உள்ளார்.