Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் இறங்கிய மனைவி;பிடிக்காத கணவன் – வீடியோ கால் பேசும் போது நடந்த கொடூரம் !

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (08:33 IST)
சுட்டுக் கொல்லப்பட்ட முனைஸ்

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கணவர் தன் மனைவி அரசியலில் இறங்கியதால் பிடிக்காமல் அவரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் சுனில் கோத்ரா என்பவரின் மனைவி முனைஸ். அரசியலில் ஆர்வம் முனைஸ் சமீப காலமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். இது அவரது கணவருக்குப் பிடிக்கவில்லை. மேலும் தன் மனைவி அடிக்கடி வீடியோ கால்களில் பேசுவதைப் பார்த்து வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாகவும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முனைஸ் தனது சகோதரியுடன் வீடியோ கால் பேசிக்கொண்டு இருந்த போது அதைப் பார்த்த சுனில் துப்பாக்கியை எடுத்து இருமுறை மனைவியை சுட்டுள்ளார். இதை எதிர்பார்க்காத முனைஸ் ‘என் கணவர் என்னை சுட்டு விட்டார்’ எனக் கூறி விட்டு இறந்துள்ளார். இதையடுத்து முனைஸின் சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சுனில் கோத்ராவை கைது செய்த போலிஸார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments