Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருவரைக் காதலித்த பெண்: பிறந்த குழந்தை யாருடையது – குடும்பமே சேர்ந்து செய்த கொடூரம் !

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (08:27 IST)
கோப்புப் படம்

விருதுநகர் மாவட்டத்தில் 11 மாதக் குழந்தையை பெற்றோரே குடும்பத்தாரின் உதவியோடு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவர் பள்ளி மாணவி ஒருவரைக் காதலித்துள்ளார். அதனால் அந்த மாணவி கர்ப்பமாக இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆன சில மாதங்களிலேயே அவர்களுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் தனது மனைவிக்கும் அவரது மாமன் மகளுக்கும் தொடர்பு இருந்ததை அமல்ராஜ் கண்டுபிடித்துள்ளார். இதனால் இப்போது பிறந்திருக்கும் குழந்தை யாருடையது என்பதில் அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் அமல்ராஜும்  அவரது பெற்றோரும் குழந்தையைக் கவனிப்பது கூட இல்லை. இதையடுத்து அமல்ராஜ் அந்த குழந்தையைக் கொலை செய்துவிட்டால் நாம் இருவரும் சந்தோஷமாக வாழலாம் என மனைவியிடம்  அறிவுரை கூறியுள்ளார்.

இதையடுத்து அமல்ராஜ் மற்றும் அவரது பெற்றோர் காவல் காக்க, பெற்ற தாயே அந்த பெண்ணை கிணற்றில் மூழ்க வைத்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் எப்படியோ போலிஸுக்குத் தெரிய வர, தனது மகளைக் காப்பாற்ற அந்த பெண்ணின் அப்பா, அமல்ராஜ்தான் கொலை செய்ததாக போலிஸில் புகார் அளித்துள்ளார். இதன் பிறகு போலிஸார் நடத்திய விசாரணையில் குடும்பமே சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments