Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூட்கேஸுடன் ஆட்டோவில் ஏறிய நபர்… துர்நாற்றம் – விசாரணையில் திடுக் தகவல் !

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (09:52 IST)
மும்பையில் ஆட்டோ ஒன்றில் ஏறிய மர்மநபர் வைத்திருந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வந்ததை பற்றி கேட்டதை அடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையில் ஆட்டோ ஒன்றில் ஒரு நபர் சூட்கேஸோடு ஏறியுள்ளார். பாதி வழியில் அந்த பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீச அதுபற்றி கேட்டுள்ளார். அதனால் பதற்றமடைந்த அவர் பெட்டியை பாதி வழியிலேயே தூக்கி எறிந்துவிட்டு ஆட்டோவில் இருந்து தப்பித்து சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுனர் போலிஸில் புகாரளிக்க அதுபற்றி விசாரணை நடந்தது.

அந்த சூட்கேஸைப் போலிஸார் கண்டுபிடித்து பார்த்தபோது அதில் ஒரு பெண்ணின் உடல் துண்டு துண்டாக நறுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த நபரைத் தேடிய போலீஸார் அவரைக் கைது செய்து கண்டுபிடித்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் அரவிந்த் திவாரி என்றும் கொலை செய்யப்பட்டது அவரது மகள் பிரின்ஸி என்பதும் தெரியவந்துள்ளது.

மும்பையில் தன் மூத்த மகள் பிரின்ஸியுடன் வசித்து வந்துள்ளனர். பிரின்ஸி தன்னுடன் பணிபுரிந்து வந்த ஒருவரைக் காதலிக்க அதற்கு திவாரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனாலும் பிரின்ஸி தனது காதலைத் தொடர கோபத்தில் அவரைக் கொலை செய்துள்ளார் திவாரி. பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அதை ஒரு சூட்கேஸில் பார்சலாகக் கட்டி ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீச ஆட்டோ ஓட்டுனர் அதுபற்றிக் கேட்க, பார்சலை பாதி வழியிலேயே தூக்கி எறிந்துவிட்டு அவர் தப்பித்துள்ளார்.அப்போதுதான் ஆட்டோ ஓட்டுனரால் சிக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments