Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து தகராறில் 6 வயது சிறுவனை அடித்துக் கொன்ற உறவினர்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (11:17 IST)
கேரள மாநிலம் இடுக்கியில் சொத்து தகராறு காரணமாக 6 வயது மகனை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்துள்ளார் உறவினர் ஒருவர்.

தமிழக கேரள எல்லையில் உள்ள ஆமைக்குண்டம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் ரியாஸ் மற்றும் சபியா. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும் 6 வயதில் அப்துல் ரைஹான் என்பவரும் இருந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கும் சபியாவின் சகோதரி ஆஷ்மி மற்றும் அவரது கணவர் ஷான் ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்சனை இருந்துள்ளது.

இது சம்மந்தமாக காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபியாவின் வீட்டுக்கு சென்ற ஷான் ஆத்திரத்தில் அப்துல் ரைஹானை சுத்தியலால் பலமாக தாக்கியுள்ளார். தடுக்க வந்த சபியா மற்றும் அவரின் தாயாரையும் தாக்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியான சபியாவின் மகள் ஆயிஷா கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.

அதனால் அங்கிருந்து ஷான் தப்பிச் சென்றுள்ளார். தாக்குதலில் அப்துல் ரைஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஷானை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments