விவாகரத்து கிடைத்ததை கொண்டாட பால் குளியல் போட்ட நபர்.. சுதந்திரம் பெற்றதாக அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 13 ஜூலை 2025 (15:11 IST)
அசாம் மாநிலம் நல்பரி மாவட்டத்தை சேர்ந்த மணிக் அலி நீண்டகாலமாக எதிர்பார்த்த "சுதந்திரத்தைப்" பெற்றதாகவும், அதற்காக பால் குளியல் செய்ததாகவும் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் பதிவு செய்துள்ளார்.  அவர்  தனது மனைவியிடம் இருந்து சட்டப்பூர்வமாக பிரிந்த மகிழ்ச்சியில் தான் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..
 
தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில்,  அலி தனது வீட்டின் வெளியே, ஒரு பிளாஸ்டிக் விரிப்பின் மீது நின்று கொண்டிருக்கிறார். அவரது அருகில் பால் நிரம்பிய நான்கு வாளிகள் வைக்கப்பட்டுள்ளன. அவர் ஒவ்வொரு வாளி பாலையும் எடுத்துத் தன் மீது ஊற்றி, தனது விவாகரத்தை கொண்டாடுவதை காண முடிகிறது.
 
இந்த முழு கொண்டாட்டத்தையும் கேமராவில் பதிவு செய்த திரு. அலி, "இன்றிலிருந்து நான் சுதந்திரமானவன்" என்று அறிவிப்பதையும் கேட்க முடிகிறது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பல்வேறு விதமான கருத்துகளை பெற்று வருகிறது.
 
என் மனைவி தனது காதலனுடன் தொடர்ந்து ஓடிவிட்டார். எங்கள் குடும்பத்தின் அமைதிக்காக நான் அமைதியாக இருந்தேன்.  இதற்கு முன்பும் அவர்  குறைந்தது இரண்டு முறையாவது ஓடிவிட்டார். இப்போது எனக்கு  சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைத்தது என்று தெரிவித்தார்,.
 
மேலும் "நேற்று என்னுடைய வழக்கறிஞர் விவாகரத்து இறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார். எனவே, இன்று எனது சுதந்திரத்தை கொண்டாட பால் குளியல் போடுகிறேன்," என்று அவர் வைரல் காணொளியில் தெரிவித்தார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-ஐ ஏன் எதிர்க்கிறோம்? முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் விளக்கம்!

41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்தவர் விஜய்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!

SIR திருத்தத்துக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்: தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

தேர்தல் பிரச்சாரமா? உல்லாச சுற்றுப்பயணமா? ராகுல் காந்தியை கிண்டல் செய்த பாஜக..!

பாதுகாப்பு பயிற்சியின்போது கிராமம் அருகே ஏவுகணை: ராஜஸ்தானில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments