ரயில் முன் பாய்ந்த இளைஞர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் !

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (08:13 IST)
மும்பையில் உள்ள குர்லா ரயில்நிலையத்தில் ரயிலுக்கு முன் பாய்ந்த ஒருவர் உடல் சிதறி தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மும்பை புறநகர் பகுதியில் குர்லா ரயில் நிலையம் அமைந்துள்ளது. அப்போது ரயிலின் வருகைக்காக பயணிகள் சூழ காத்திருந்தபோது ரயில், ஸ்டேஷன் நோக்கி வந்தது. இதனால் பயணிகள் அனைவரும் அதில் ஏற ஆயத்தமானார்கள். அப்போது கூட்டத்தில் இருந்து முன்னே வந்த ஒருவர் அங்கு தண்டவாளத்தில் குதித்து தலைவைத்துப் படுத்துகொண்டார்.

இதில் ரயில் அவர் மேல் ஏறி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதனால் பயணிகள் அலறியடித்து ஓட பதற்றமான சூழல் உருவானது. சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி மக்களை பதைபதைக்க வைத்துள்ளது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments