Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிளில் 100 கிலோ மீட்டர் செல்ல இலக்கு… இளைஞருக்கு பாதிவழியில் மாரடைப்பு!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (17:38 IST)
100 கிலோ மீட்டர் சைக்கிளில் செல்ல இலக்கு நிர்ணயித்து சென்ற குழுவில் இளைஞர் ஒருவர் பாதி வழியிலேயே மாரடைப்பு வந்து பலியாகியுள்ளார்.

கர்நாடகாவின் பிகலி பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ். படேலின் மகன் வினோத் என்பவர். இவர் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து 100 கிலோ மீட்டர் சைக்கிளிங் செல்ல முடிவு செய்துள்ளார். அந்த குழு நேற்று பகல்கோட்டிலிருந்து கேரூர் வரை செல்ல முடிவெடுத்திருக்கின்றனர். 

இந்நிலையில் சைக்கிள்ங் சென்று கொண்டிருக்கும் போது 40 கி மீட்டரைக் கடந்த போது, வினோத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றிருந்த டாக்டர் கிரிஷ் அவருக்கு முதலுதவி செய்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இதற்கு முன்னர் சைக்கிளிங் அனுபவம் இல்லாத வினோத் அதிக தூரம் சென்றதாலேயே மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments