Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாரின் தொல்லை தாங்க முடியவில்லை…வீடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்த குடும்பம்!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (11:55 IST)
ஆந்திராவில் போலிஸாரின் தொல்லை தாங்க முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டுள்ளார் அப்துல் சலாம் என்பவர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் சலாம் என்பவர் நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு நடந்த நகை திருட்டுக்கு அப்துல் சலாம்தான் காரணம் என நகைக்கடை உரிமையாளர் போலிஸாரிடம் புகார் கொடுக்க அவரைக் கைது செய்துள்ளது காவல்துறை. மேலும் அவரை போலிஸார் கொடுமைப் படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த சலாம் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்துள்ளார். ஆனாலும் போலிஸார் மற்றும் நகைக்கடை உரிமையாளரின் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் அவர் ஆட்டோவில் பயணம் சென்ற போது தான் வைத்திருந்த நகையைக் காணவில்லை என ஒரு நபர் புகார் கொடுக்க சலாமைக் கைது செய்துள்ளனர் போலிஸார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சலாம் மற்றும் குடும்பத்தினர் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வீடியோ மூலம் வெளியிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சலாமுக்கு நூர்ஜஹான் என்ற மனைவியும், சல்மா என்ற 15 வயது மகளும், 9 வயதில் கலந்தர் என்ற மகனும் இருந்தனர். இந்த சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ரஷ்யாவை ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன்.. கனிமொழி சென்ற விமானம் வானில் வட்டமிட்டதால் பரபரப்பு..!

மெட்ரோ பயணிகள் கழிப்பறையை யூஸ் செய்தால் கட்டணம்.. வலுக்கும் எதிர்ப்பு..!

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments