Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

9 வயது சிறுவனை தலைகீழாக தொங்கவிட்ட கடைக்காரர் கைது: வீடியோ எடுத்தவரும் கைது!

arrested
, புதன், 19 அக்டோபர் 2022 (15:04 IST)
9 வயது சிறுவனை தலைகீழாக தொங்கவிட்ட கடைக்காரரும் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்தர்பூர் என்ற மாவட்டத்தில் மொபைல் போன் கடையில் 9 வயது சிறுவன் மொபைல்போன் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார்
 
இதனை அடுத்து அந்த சிறுவனை தலைகீழாக கிணற்றில் கட்டி தொங்க விட்டு கடைக்காரர் அந்த சிறுவனை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் இதை அந்த கடையில் வேலை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார் 
 
இந்த நிலையில் 9 வயது சிறுவனை தலைகீழாக தொங்க விட்ட கடைக்காரர் மற்றும் அதனை வீடியோ எடுத்த நபர் ஆகிய இருவர் மீதும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக்காளி விலை திடீர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி, பொதுமக்கள் அதிர்ச்சி!