இல்லாத நாடுகளின் பெயரில் போலி தூதரகம்.. ஒருவர் கைது. ரூ.44 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!

Mahendran
வியாழன், 24 ஜூலை 2025 (11:06 IST)
டெல்லியில் உலகில் இல்லாத நாடுகளின் பெயரில் போலியான தூதரகத்தை நடத்தி வந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்கு ஆர்டிக்கா, சபோர்கா, பெளல்வியா, லோடோனியா போன்ற உலகில் இல்லாத நாடுகளின் பெயர்களைக் கூறி, ஒரு வாடகை வீட்டில் போலியான தூதரகத்தை நடத்தி வந்த ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நாடுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி, பண மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் போன்ற செயல்களில் இவர் ஈடுபட்டு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
போலி தூதரகத்தில் இருந்து ரூபாய் 44 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், கார்கள், போலியான பாஸ்போர்ட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இவர்  பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக போலியாக புகைப்படங்களை செட்டப் செய்துள்ளார் என்றும், ஏற்கனவே சட்டவிரோத செயற்கைக்கோள் தொலைபேசியை பயன்படுத்தியதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. 
 
இந்த சம்பவம் டெல்லி காவல்துறையினர் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments