Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல்லாத நாடுகளின் பெயரில் போலி தூதரகம்.. ஒருவர் கைது. ரூ.44 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!

Mahendran
வியாழன், 24 ஜூலை 2025 (11:06 IST)
டெல்லியில் உலகில் இல்லாத நாடுகளின் பெயரில் போலியான தூதரகத்தை நடத்தி வந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்கு ஆர்டிக்கா, சபோர்கா, பெளல்வியா, லோடோனியா போன்ற உலகில் இல்லாத நாடுகளின் பெயர்களைக் கூறி, ஒரு வாடகை வீட்டில் போலியான தூதரகத்தை நடத்தி வந்த ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நாடுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி, பண மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் போன்ற செயல்களில் இவர் ஈடுபட்டு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
போலி தூதரகத்தில் இருந்து ரூபாய் 44 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், கார்கள், போலியான பாஸ்போர்ட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இவர்  பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக போலியாக புகைப்படங்களை செட்டப் செய்துள்ளார் என்றும், ஏற்கனவே சட்டவிரோத செயற்கைக்கோள் தொலைபேசியை பயன்படுத்தியதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. 
 
இந்த சம்பவம் டெல்லி காவல்துறையினர் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கருக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்குமா?

தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. விமானத்தில் பயணம் செய்தவர்கள் பலி..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அதை இப்போது சொல்ல முடியாது.. ராஜ்ய சபா எம்பி பதவியேற்க இருக்கும் கமல் பேட்டி..!

9.42 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments