Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம்: மம்தா பானர்ஜி எடுத்த முக்கிய முடிவு..!

Advertiesment
Mamtha

Siva

, செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (06:54 IST)
பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்றார் என செய்தி வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர சம்பவத்திற்கு எதிராக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பாதுகாப்பு மற்றும் நீதி கோரி கடந்த சில நாட்களாக போராடி வருகின்றனர்.

மருத்துவர்கள் தரப்பின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நேற்று மருத்துவர்களுடன் 3 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், மருத்துவர்கள் முன்வைத்த 4 முக்கிய கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

கொல்கத்தா காவல் ஆணையர் மற்றும் மேற்கு இணை ஆணையரை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்த மம்தா பானர்ஜி, இதனால் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடையே நிலவி வந்த பாதுகாப்பு குறைபாடு தொடர்பான நம்பிக்கையை பெற முயற்சி செய்துள்ளார். சுகாதாரத்துறையில் மேலும் இரண்டு உயரதிகாரிகளை நீக்கவும் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். இதுவும் மருத்துவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாகும்.

இந்த முடிவுகளால், மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தாலும், இன்னும் சில கோரிக்கைகள் பற்றிய தீர்வுகள் அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இருக்கும் என கூறப்படுகிறது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!