Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் சிங்கிளாகத்தான் போராடுவேன்; கீழ்த்தரமான காங்கிரஸுடன் சேரமாட்டேன்; முதல்வர் கறார்

நான் சிங்கிளாகத்தான் போராடுவேன்; கீழ்த்தரமான காங்கிரஸுடன் சேரமாட்டேன்; முதல்வர் கறார்

Arun Prasath

, வியாழன், 9 ஜனவரி 2020 (13:28 IST)
கீழ்த்தரமான அரசியல் செய்யும் காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளுடன் சேர்ந்து போராடாமால் தனியாகவே போராடுவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

வருகிற ஜனவரி 13 ஆம் தேதி எதிர்கட்சிகள் டில்லியில் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொள்ள மறுத்துள்ளார். இது குறித்து அவர், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நான் தனியாக போராடுவேன். கீழ்த்தரமான அரசியல் விளையாட்டை நடத்தி வரும் காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளுடன் கைகோர்க்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.ஐ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: சிசிடிவில் சிக்கிய இருவர்!