பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

Siva
வெள்ளி, 30 மே 2025 (20:27 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தை முன்னிட்டு, பாஜக "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடைப்பயணத்தை நாடு முழுவதும் மேற்கொண்டு வருகின்றது. இந்தப் பயணத்தின் போது, பெண்களுக்கு சிந்தூரம் வழங்கும் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன.
 
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில், “ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜக அரசியல் நாடகம் நடத்துகிறது. ராணுவத்தின் வீரத்தை தங்களுக்கே ஒதுக்க முயற்சி செய்கிறார்கள். மோடியை ஒருவித கடவுளாக போற்றி, வீடுவீடாக சென்று பெண்களுக்கு குங்குமம் கொடுப்பது என்பது பாரம்பரியத்தை திரிபுபடுத்தும் செயல்,” என விமர்சித்தார்.
 
இதில் மேலும் காங்கிரஸ் கட்சியும் குரல் கொடுத்து, “ராணுவத்தின் தாக்குதலை பாஜக அரசியல் லாபத்துக்குப் பயன்படுத்துகிறது. பெண்களின் உணர்வுகளை அரசியல் வசீகரத்திற்காக பயன்படுத்துவது முறையல்ல,” என தெரிவித்தது.
 
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை "ஆபரேஷன் சிந்தூர்" என அழைத்ததை நினைவுபடுத்தும் வகையில் இந்த சின்னத்தை பாஜக தற்போது தங்களது பிரசாரத்தில் பயன்படுத்துகிறது. ஆனால், இது அரசியல் நோக்கத்தில் மாறியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
 
இந்த சூழலில், “பெண்களின் குங்கும மரியாதை அரசியல் விளம்பரமாக மாறக்கூடாது” என்பது எதிர்ப்பாளர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments