Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரை காக்க வைத்த தலைமை செயலர்! – பணியிலிருந்து நீக்க மம்தா மறுப்பு!

Webdunia
திங்கள், 31 மே 2021 (10:57 IST)
காணொலி ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியை காக்க வைத்த தலைமை செயலரை பணிநீக்கம் செய்யமுடியாது என முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் யாஸ் புயலால் மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் மோடி காணொலி வாயிலாக காத்திருந்த நிலையில் மேற்கு வங்க தலைமை செயலர் அதற்கு பதிலளிக்க காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

தலைமை செயலரின்  செயலை கண்டித்து அவரை பணிநீக்கம் செய்ய மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் கொரோனாவால் மாநிலம் இக்கட்டான சூழலில் உள்ள நிலையில் தலைமை செயலரை பணிநீக்கம் செய்ய முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா மறுத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments