Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூபை பார்த்து கள்ளநோட்டு அச்சடித்தவர் கைது: அச்சு இயந்திரம் பறிமுதல்..!

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (11:13 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் யூடியூபை பார்த்து கள்ள நோட்டை அச்சடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அச்சடித்த இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்காவ் என்ற பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் அந்த பகுதியில் ஆய்வு செய்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக ராஜேந்திரன் யாதவ் என்பவரது வீட்டில் திடீரென சோதனை நடத்தினார். அப்போது அவர் ரூபாய் 1.6 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மற்றும் அச்சடிக்கும் இயந்திரங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
 
இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது யூடியூபை பார்த்து கள்ள நோட்டு அச்சடிக்க கற்றுக் கொண்டதாகவும் கள்ள நோட்டை கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்தில் விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் என விதவிதமாக அவர் கள்ள நோட்டு அடித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments