Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்நாவிஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு..

Arun Prasath
சனி, 9 நவம்பர் 2019 (20:18 IST)
மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவேந்திர ஃபட்நாவிஸை ஆளுநர் அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் மொத்தமுள்ள 288 இடங்களில் 105 இடங்களை பாஜகவும், 56 இடங்களை சிவ சேனாவும் கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி நடந்து வருகிறது. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக முதல்வர் வேட்பாளர் தேவேந்திர பட்நாவிஸ்க்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சட்ட பேரவை தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி பாஜக என்பதால் ஃபட்நாவிஸை ஆளுநர் அழைத்துள்ளார் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு சூடானை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை.. விசா நிறுத்தம்.. என்ன காரணம்?

சத்திய சோதனை போல் பொய்களின் சோதனை என மோடி புத்தகம் எழுதலாம்: ராகுல் காந்தி

சீனாவுக்கு மட்டும் 50% விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..!

நொண்டி, கூன், குருடு என ஒரு அமைச்சர் பேசுவதா? துரைமுருகனுக்கு வலுக்கும் கண்டனங்கள்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments